அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தை மாற்ற முயற்சித்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாத. நிலையே உருவாகும் என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் இனி வரும் யுகத்தில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டம் சனிக்கிழமை (8) அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 21 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம், இப்புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளோம். மக்களுடன் கலந்துரையாடியே அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான எந்த தீர்மானங்கள் பிழைத்ததில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கும்போது கட்சியில் 140 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர். அவர் அதனை இரண்டு பேராக குறைத்துள்ளார்.
ஆனால், இப்போது எமது புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமின்றி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட வேறு கட்சிகளிலிருந்தும் வந்து இணைகின்றனர்.
இப்புதிய கூட்டணியின் மக்கள் கூட்டம் நடத்தப்படுவதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தைக் காண்பிப்பதற்காகவே. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், நாடு இருந்த நிலையை மக்கள் நன்கு அறிவர். எரிபொருள் வரிசைகளிலும் சமையல் எரிவாயு வரிசைகளிலும் நின்று மக்கள் உயிரிழந்தனர். நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறைந்தபட்சம் மருந்துகளை கொள்வனவு செய்யவும் முடியாமல் இருந்தது.இதற்கான நிதி திறைசேரியில் இருக்கவில்லை. 50 மில்லியன் டொலரை தேடிக்கொள்ள முடியாமல் துறைமுகத்துக்கு வந்த எரிபொருள் கப்பல் திரும்பிச் சென்றது.
விவசாயிகளுக்கு உரம் கிடையாது வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். .பெற்றோல் செட்களில் வாரக் கணக்கில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் .நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
அந்த வகையில் நாம் ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இப்பொழுது முன்னெடுத்துச் செல்லும் பயணத்தை மாற்றினால் மீண்டும் நாடு மீள கட்டி யெழுப்ப முடியாத நிலைக்கு வீழ்ச்சி யடையும். இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியினாலோ முடியாது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment