இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் நாளை (20) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரு தரப்பு உறவு தொடர்பான பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இரு தரப்பு விஜயம் இதுவாகும்.
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக் கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுவதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும் என உயர் ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment