இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கோர சம்பவம் இந்தோனேசியா - தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தோனேசியா - காலேம்பாங் கிராமத்தில் 45 வயதான பரிதா என்ற பெண் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில், தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே ஆடைகளுடன் பரிதாவின் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் மீட்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறினாலும் இந்தோனேசியாவில் மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று மலைப்பாம்புவால் இருவர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment