இலங்கையில் 30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 18, 2024

இலங்கையில் 30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள்

இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில் மரணித்தவர்களுக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் 3,146 பேர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், 1,300 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு நாளை (19) பிற்பகல் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற உள்ளது.

நாளை பி.ப. 4.00 மணிக்கு தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. 

இதன் காரணமாக பொல்தூவ சந்தி மற்றும் கியன்ஹேம் சந்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு நுழைகின்ற மற்றும் வெளியேறுகின்ற வீதிகள் பிற்பகல் 3.00 மணி முதல் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து 30 வருட யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அப்போதைய அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment