மின் கட்டண உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றில் மனு - News View

About Us

About Us

Breaking

Monday, January 8, 2024

மின் கட்டண உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றில் மனு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் இன்று (08) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உயர் நீதிமன்றில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment