'கரு சரு' திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம் - அமைச்சர் மனுஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

'கரு சரு' திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம் - அமைச்சர் மனுஷ

'கரு சரு' திட்டத்தின் மூலம் இந்த நாட்டின் தொழிலாளிகள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம். உலகின் ஏனைய நாடுகளில் மீனவர், நீர் குழாய் பொருத்துனர், வைத்தியர் மற்றும் பொறியலாளர் என வேறுபட்டியின்றி அனைவரும் சமூகத்தில் சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். அங்கு அவர்கள் யாவருக்கும் ஒரே அளவிலான கௌரவம் அளிக்கப்படுகிறது என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

'கரு சரு' திட்டத்தின் மூலம் மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் மீவனவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (17) தொழில் திணைக்கள கேட்போர் கூட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழிலாளிகளுக்கிடையில் சம்பளங்களில் மாற்றம் காணப்பட்டபோதும் அங்கு எந்தொரு நபரின் அங்கீகாரமும் கௌரவமும் மாற்றமடையாது. எனவே அந்த நாடுகளில் எல்லா வேலைகளும் கௌரவத்துக்குரியதாகவே கருதப்படுகிறது.

எமது நாட்டில் கட்சிகள், இனங்கள், சாதிகள் என தொழிற்சங்க ரீதியாகப் தனித்தனி பலன்களை பெற்றுக் கொளவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முறைசாரா துறையில் அணைத்து தொழிலாளர்களுக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு எமது அமைச்சீன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் 25 லட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் பொருளாதாரத்திற்கு 60 லட்சம் பேர் பங்களிக்கின்றனர். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் இந்த மீனவ சமூகத்தை பாதுகாக்க எந்தொரு முறையான திட்டமும் இல்லை. இந்த 60 லட்சம் பேருக்கு கௌரவத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

விசேடமாக தன் கையில் பணப் புழக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும் ஆயுதமாகவே நாம் இந்த 'கருசரு' வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

தொழிலாளர் சட்டத்தை மாற்றி தொழில் பாதுகாப்பு சட்டம் அமைத்து அதில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுப்போம்.

மீனவர்கள் வேலை செய்ய முடியாத நிலையில், வேலையிழந்த நிலையில் இவர்களை கவனித்துக் கொள்ளும் அமைப்பை உருவாக்கவே நாம் இந்த பணியை செய்து வருகிறோம்.

மூன்று மாதங்களுக்குள் நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கான உரிய அறிக்கையை அமைச்சரவைக்கு வழங்குவதாக நாங்கள் உறுதியளித்தோம்.

அதன் மூலம் விவசாயக் காப்பீடு, உழவர் காப்பீடு, தொழிலாளர் சோமலாபா நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்ற அனைத்து விதமான நிதிகளையும் திரட்டி அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முன்மொழிவு நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

55 வயதுக்கு பிறகு நீங்களும் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற பொருளாதார நிதிகளைப் பெற முடியும். வேண்டுமானால் ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம். இது நாடு தழுவிய திட்டமாகும்.

இனி மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் கடலுக்கு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது. கடலுக்கு செல்பவர்கள் காப்பீடு செய்யப்பட வேண்டும், மேலும் இந்த காப்பீடு பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது. ஆனால் படகு பழுதாகி மக்கள் அனைவரும் உயிர் இழந்தால் மட்டுமே காப்பீடு செலுத்தப்படுகிறது. இங்கு பல குழப்பங்கள் உள்ளன.

குறிப்பாக ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போனால், இறப்பு சான்றிதழ் பெற முடியாது. இது போன்ற நேரங்களில் அவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்ற கேள்விகளும் உள்ளன. ஒரு படகை இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும்போது, எந்த காப்பீட்டு நிறுவனம் தலையிடுகிறது என்பதில் சிக்கல் உள்ளது.

இந்த விடயங்கள் எமது அமைச்சுடன் தொடர்புடையவை அல்ல. மீன்பிடி அமைச்சு தொடர்பான விடயங்கள். ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் தேவையானதை நாங்கள் செய்கிறோம்.

உலகில் உள்ள மற்ற மீனவர்கள் மீன்பிடிக்கும்போது பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைப் நாம் பயன்படுத்துகிறோமா? அவ்வாறு பயணத்துவதனால் எமது விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். இவற்றை சட்டங்களாக முன்வைக்க இருக்கிறோம். சில சமயங்களில் நாங்கள் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்க முயல்வது போன்ற உணர்வு ஏற்படும். ஏனைய நிறுவனங்களுடன் பேசி முரண்பாடின்றி இவற்றை மேற்கொள்ள முயன்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment