காதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குக : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

காதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குக : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு

நாட்டில் பதவி வகிக்கும் 65 காதி நீதி­ப­தி­களும் வரு­டாந்தம் 15000 வழக்கு­களைக் கையாள்­கி­றார்கள். கௌர­வ­மான பதவி வகிக்கும் இவர்­க­ளுக்கு மாதாந்தம் சிறி­ய­தொரு தொகையே கொடுப்­ப­ன­வாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இக்­கொ­டுப்­ப­ன­வினை எதிர்­வரும் 2024ஆம் ஆண்­டிற்­கான வரவு, செலவுத் திட்­டத்தில் அதி­க­ரிக்­கும்­படி காதி நீதிப­தி­களின் போரம் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

காதி நீதி­ப­தி­களின் போர­த்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.எம். பௌஸ் மற்றும் உப தலைவர் இப்ஹாம் யெஹ்யா என்போர் கையொப்­ப­மிட்டு இக்­க­டி­தத்தை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, காதி நீதி­ப­திகள் ஒவ்­வொரு மூன்று வருட காலத்­திற்கும் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு நேர்முகப் பரீட்சையின் பின்பு நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். இப்­ப­த­விக்கு மாதாந்த கொடுப்­ப­ன­வாக காதி நீதி­ப­திக்கு ஏழா­யி­ரத்து ஐநூறு ரூபாவும், ஏனைய நீதி­மன்ற பணி­க­ளுக்­காக ஆறு ஆயி­ரத்து இரு­நூற்றி ஐம்­பது ரூபாவும் மாதாந்தம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் காதி நீதிபதிகள் பணி­பு­ரி­வதில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்கொள்கின்றனர்.

இந்தக் கொடுப்­ப­னவு இக்­கா­ல­கட்­டத்தில் எவ்­வ­கை­யிலும் நியாயமான­தல்ல. மிகவும் குறை­வான கொடுப்­ப­னவே வழங்கப்படுவதால் இப்­ப­த­விக்கு விண்­ணப்­பிப்­ப­திலும் தகுதியானவர்கள் ஆர்வம் காட்­டு­வ­தில்லை.

கடந்த வருடம் நாட­ளா­விய ரீதியில் 64 காதி நீதிவான் வெற்றிடங்களுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டும் இப்­ப­த­விக்கு மொத்­த­மாக 150 விண்­ணப்­ப­தா­ரி­களே விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். இதிலி­ருந்து இப்­ப­த­விக்கு விண்­ணப்­பிப்­பதில் அநேகர் ஆர்வம் காட்டுவ­தில்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

காதி நீதி­ப­தி­க­ளுக்கு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களும் வழங்கப்படவில்லை. சில பகு­தி­க­ளிலே காதி நீதி­ப­தி­க­ளுக்கு நீதிமன்ற வளா­கங்­களில் இடம் வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் உரிய அடிப்­படை வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை. பெரும்­பா­லான காதி நீதி­மன்­றங்­களின் அமர்­வுகள் பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லைகள், பொது மண்­டங்­க­ளிலே இடம்­பெ­று­கின்­றன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

எனவே, காதி ­நீ­தி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் மிகவும் குறைந்தள­வி­லான கொடுப்­ப­ன­வினை எதிர்­வரும் வரவு, செலவுத் திட்­டத்தில் அதி­க­ரித்­து­வ­ழங்­கு­மாறு வேண்டிக் கொள்­கிறோம் என கடி­தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment