தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 7, 2023

தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து !

தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாளை 8 ஆம் திகதியும், நாளை மறுதினம் 9 ஆம் திகதியும்,10 ஆம் திகதியும் இவ்வாறு தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யபட்டுள்ளதாகவும் சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டமானது, நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில்,  இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கண்டியில் உள்ள தபால் நிலையங்களும் விற்பனை செய்யத் தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் தீர்மானித்திருந்த நிலையிலேயே இவ்வறிவிப்பை தபால்மா அதிபர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவின் அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் இன்று தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment