பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அஷ்ரஃப் ஷிஹாப்தீனின் நூல் அறிமுக விழா - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அஷ்ரஃப் ஷிஹாப்தீனின் நூல் அறிமுக விழா

எழுத்தாளர், பன்முக ஆளுமை அஷ்ரஃப் ஷிஹாப்தீன் மொழி பெயர்த்த மேற்குலக முஸ்லிம் பெண் ஆளுமைகளது உரைகள் அடங்கிய "நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்" எனும் நூல் தொகுப்பின் அறிமுக விழாவை நடாத்த ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் 4 ஆம் திகதி (சனிக்கிழமை - நாளை) பி.ப. 4.00 மணிக்கு ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. காதர் அவர்களும், விசேட அதிதியாக பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். தாஹிர் (அஸ்ஹரி) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் பல கெளரவ அதிதிகளும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதற் பிரதியை தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் மஜீத் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

நூல் பற்றிய உரையை பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் மாணவர் விவகாரத்திற்கு பொறுப்பான உப அதிபர் அல் ஆலிமா எம்.ஏ.எப். ஹபிலா நிகழ்த்தவுள்ளார்.

நிகழ்ச்சிகளை பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி எம்.என்.எப். ரிஹா தொகுத்து வழங்கவுள்ளார்.

எழுத்தார்வமுள்ள ஆண்கள், பெண்கள், வாசிப்பு ஆர்வமுள்ளோர், பிரதேச ஆலிமாக்கள், ஆசிரியைகளை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு
நிகழ்வு உரிய நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் நிறைவு பெறும்.

No comments:

Post a Comment