சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 17, 2023

சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(எம்.வை.எம்.சியாம்)

சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2500 வரையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது, சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. அதற்கமைவாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2500 வரையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900ஆக காணப்பட்டது.

மேலும், அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்பியமை தொடர்பிலும் தனி நபராக அல்லது குழுவாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தனி நபர்களாக, குழுக்களாக செயற்பட்ட 90 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முற்பட்ட 9 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தவறாக செயற்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரும் அதில் அடங்குகிறார்.

இந்நிலையில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment