உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர், குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் நான்காம் வார்டிலிருந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த வேளையிலே, இவ்வைத்தியர் உயிரிழந்தார். இரத்த அழுத்தம் அதிகரித்ததால் இவர் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையிலிருந்த குழந்தையை மீட்ட இந்த மருத்துவரின் நிலை உயர் அழுத்தத்தால் மோசமடைந்தது. இதனால், அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இவ்வைத்தியரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் என்ற வைத்தியரே உயிரிழந்தவராவார்.
இவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார் .
உயர்ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால், இப்பெண் வைத்தியர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்ட இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த அவர், தனது சேவைக் காலத்தில் இரவு பகலாக உழைத்து நோயாளிகளுக்காக, உயிரைத் தியாகம் செய்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment