ஒரு வருடத்தில் மட்டும் 60 விமானிகள் நாட்டை விட்டு வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 14, 2023

ஒரு வருடத்தில் மட்டும் 60 விமானிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் அறுபது பேர் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் புதிதாக விமானிகளை பணிக்கு அமர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின், வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியையும் அரசாங்கத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெற்றுள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டால் உறுதிசெய்துள்ளார்.

ஏற்கனவே, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நட்டத்தில் இயங்கியது. இலங்கை கடந்த வருடம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் பலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டின் அந்நியச் செலவாணி நெருக்கடியும் உயர் வரிகளை விதிப்பதற்கான திட்டங்களுமே, நாட்டிலிருந்து விமானிகள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வெளியேறியதால், விமானிகளை பேணுவதில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வருடம் 30 விமானிகள் தேவை அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள் 50 விமானிகள் தேவையென ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிஷ்டவசமாக தென்கிழக்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஐரோப்பாவிலும் திறமையான விமானிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment