இன்று முதல் வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

இன்று முதல் வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று (03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், இன்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாணம், கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலையே இதனைத் தெரிவித்துள்ளார்.

சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சன நெரிசலை குறைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment