அரசு சார்பில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் உரிமைகளை உதாசீனப்படுத்தும் விதத்தில் செயற்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) பிரதமரின் வருகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் அதிதிகளின் ஆசனத்தை புறக்கணித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவ் அரசு மற்றும் அரசு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
அதன் காரணமாகவே நான் நேற்றையதினம் அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக இவ் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தேன்.
இவ் கூட்டத்தில் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
அதன்போது, பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக்குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இவ் ஊழல்கள் மக்களுக்கு எதிரான செயல்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்ள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment