மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வட்டி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மற்றும் வரி வருமானமாக அறவிடப்படும் 5% பிடித்து வைத்திருக்கும் வரியை 5% பிடித்து வைத்திருக்கும் வரியை செப்டெம்பர் 10ஆம் திகதிக்குப் பின்னர் மீள வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளின் பிடித்து வைத்திருக்கும் வரி அறவீடு தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவரது பணிப்புரைக்கிணங்க இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய வருமான வரி திணைக்களத்தின் மதிப்பீட்டு அதிகாரிகள் சங்கத்தின் 10ஆவது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றதுடன் அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிரேஷ்ட பிரஜைகளுக்கு மட்டுமன்றி வருடாந்தம் 12.5 ரூபாவுக்கு அதிகமான வரி வருமானத்தை பெற்றுக் கொள்வோரிடமிருந்து நூற்றுக்கு 5 வீத பிடித்து வைத்திருக்கும் வரி இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாதாந்தம் ஒரு இலட்சத்துக்கும் குறைவான வட்டி வருமானத்தைப் பெறும் சிரேஷ்ட பிரஜைகளிடமிருந்தும் அந்த பிடித்து வைப்பு வரி அறவிடப்பட்டதுடன் அதனை மீள வழங்குவதற்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நாம் அது தொடர்பில் மனிதாபிமான ரீதியில் கவனம் செலுத்தினோம்.
அதனையடுத்து, அவர்களிடமிருந்து அறவிடப்பட்ட அந்த நிதியை மீள வழங்குவது தொடர்பில் தேசிய வருமான வரி திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் பெற்றுக் கொண்ட அந்த பணத்தை மீண்டும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment