கடந்த சில வருடங்களில் ஹஜ் யாத்திரைக்காக மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய பதிவுக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டு இதுவரை காலம் யாத்திரை மேற்கொள்ளாதவர்கள் தங்களது பதிவுக் கட்டணங்களை தாமதியாது மீளப் பெற்றுக் கொள்ளும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரைக்காக புதிதாக பதிவுகள் இடம்பெறவுள்ளதுடன் அந்தந்த வருடத்திற்கான ஹஜ் யாத்திரை தெரிவுகள் புதிதாக விண்ணப்பிப்பவர்களிலிருந்தே இடம்பெறும்.
இதேவேளை விண்ணப்பிப்பவர்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் வகையிலான 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் கட்டாயம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையின் கீழ் ஏற்கனவே 25 ஆயிரம் ரூபா செலுத்தி விண்ணப்பித்துள்ளவர்கள் அக்கட்டணத்தை மீளப் பெற்றுக் கொண்டு அடுத்த வருடம் ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டிருந்தால் புதிதாக 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரிவித்தார்.
அடுத்த வருட ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் தாமதமின்றி கோரப்படும். இணைய வழியூடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறினார்.
Vidivelli
No comments:
Post a Comment