இலங்கையில் காணாமல்போன டென்மார்க் பெண்ணின் உடல் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

இலங்கையில் காணாமல்போன டென்மார்க் பெண்ணின் உடல் மீட்பு

அலகல்ல கடுகண்ணாவ மலையில் நடை பயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கைச் சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் நேற்று (13) முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜூலை மாதம் 10 ஆம் திகதி கண்டியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

தான் சுற்றுலா செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

அதன் பிறகு அவரது அறையை உடைத்த பொலிஸார் அவரது உடைமைகள் சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.

அவர் திரும்பி வருவாரா என்பதைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்திடம் பொலிஸார் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், குறித்த பெண் விடுதி திரும்பாததால் அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (13) முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டது. 

குறித்த பெண் மலையில் நடை பயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment