பயணிகள் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது : வரவேற்ற ஆளுநர் செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

பயணிகள் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது : வரவேற்ற ஆளுநர் செந்தில் தொண்டமான்

சென்னையில் இருந்து புறப்பட்ட Cordelia Cruises (MV Empress) எனும் சொகுசுக் கப்பல் இன்று (08) திருகோணமலையை வந்தடைந்தது.

குறித்த கப்பல் திருகோணமலையை வந்தடைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டிருந்ததுடன், அவர் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கப்பலை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

குறித்த கப்பலில் வருகை தந்த பயணிகளுக்கு, திருகோணமலையில் காணப்படும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான விசேட ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலான Cordelia Cruises, 1,600 பயணிகளுடன் நேற்று (07) இலங்கையின் அம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று பிற்பகல் புறப்பட்ட குறித்த கப்பல் இன்று (08) திருகோணமலையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கடந்த ஜூன் 05ஆம் திகதி இக்கப்பலின் பயணத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment