இலங்கையின் 'மகாவம்சத்தை' உலக நினைவக மரபுரிமை (Memory of the World - MoW) ஆவணமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
மகாவம்சம் இலங்கையின் லக்திவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹா விஹாரிக மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியமாகும்.
இது கி.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1815 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
மேலும் இது இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி மூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்துகின்றது.
மகாவம்சம் தெற்காசியாவில் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகக் கருதப்படுகிறது.
இதில் புத்தர், பேரரசர் அசோகர் தொடர்பாகவும் பௌத்த மதத்தின் எழுச்சி பற்றிய முக்கியமான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்ட உலக நினைவக மரபுரிமை சர்வதேச ஆவணங்களில், புதிதாக சேர்க்கப்பட்ட 64 பாரம்பரியங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
மகாவம்சத்தின் பல கையெழுத்துப் பிரதிகள் பல நாடுகளில் உள்ளன என்பதும் பல தென்கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment