இன்று (09) அதிகாலையில் கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பஸ்ஸின் சாரதி, லொறியின் சாரதி மற்றும் 20 பயணிகள் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment