கூட்டுறவுத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 23, 2023

கூட்டுறவுத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - பந்துல குணவர்தன

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கூட்டுறவுத்துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரேரணை முன்வைக்கிறேன். அதற்காக முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படாவிட்டால் பெருமளவு மக்களின் வைப்புப் பணமும் இழக்கப்படும் நிலை உருவாகலாம் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் சிறந்த கூட்டுறவு கட்டமைப்பு காணப்பட்டாலும் பாரியளவு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

கூட்டுறவு வங்கி முறைமை, கூட்டுறவு வளங்கள் உபயோகம், வளங்களை குத்தகைக்கு விடுதல், முறையற்ற விதத்தில் விற்பனை செய்தல் போன்ற செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதால் அதனால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். அதை விடுத்து அதனை அமைச்சருக்கோ அல்லது அமைச்சுக்கோ ஒப்படைக்கக்கூடாது.

இது மாகாண சபைக்கு உட்பட்ட விடயம் என்றாலும் சில வேளைகளில் கூட்டங்களுக்கும் மாகாண சபையிலுள்ளவர்கள் சமூகமளிப்பதில்லை. அவர்கள் உத்தரவுகளை ஏற்றுக் கொள்வதுமில்லை.

அதனால் கூட்டுறவுத்துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளது.

அந்த வகையில் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படாவிட்டால் பெருமளவு மக்களின் வைப்புப் பணமும் இழக்கப்படும் நிலை உருவாகலாம் என்றார்.

No comments:

Post a Comment