கைது செய்யப்பட்ட ராஜகுமாரி உயிரிழந்த விவகாரம் : குடும்பத்தை மௌனமாக்குவதற்காக பணம் வழங்க முன்வந்த பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

கைது செய்யப்பட்ட ராஜகுமாரி உயிரிழந்த விவகாரம் : குடும்பத்தை மௌனமாக்குவதற்காக பணம் வழங்க முன்வந்த பொலிஸார்

கொழும்பு வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யபபட்டு தாக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் (42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள்  இடம்பெறுகின்ற அதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தவரின் குடும்பத்தவர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் இந்த விவகாரம் மேலும் குழப்பமானதாக மாறியுள்ளது.

வெலிக்கடை பொலிஸில் உயிரிழந்த பெண்ணின்  கணவருக்கு பத்தாயிரம் ரூபாயை வழங்க முன்வந்த பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளமை உள்ளக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ள பொலிஸ்மா அதிபர் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கு இல்லை.

பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட விசாரணைப் பிரிவு  ராஜகுமாரியை பொலிஸார் ஐந்து மணித்தியாலங்கள் தடுத்து வைத்து தாக்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளது.

பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதனை தடுப்பதற்கு எதனையும் செய்யாததும் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதேச பரிசோதனை புகைப்படங்கள் ராஜகுமாரி மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதை காண்பித்துள்ளன, எங்களிடம் (எக்கனமி நெக்ஸ்ட்) அந்த படங்கள் உள்ளன அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவையாக உள்ளன.

சுதர்மநெத்திக்குமார என்பவரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் ராஜகுமாரியை கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸார் அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர், மூத்த அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அவரை மோசமாக அடித்துள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.

உள்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் ராஜகுமாரி உயிரிழந்த பின்னர் கணவருக்கு பத்தாயிரம் ரூபாயையும் இறுதிக்கிரியைகளிற்கான செலவுகளையும் வழங்க முன்வந்துள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

எக்கனமிநெக்ஸ்ட்

No comments:

Post a Comment