கால்நடைகளை கொண்டு செல்லத் தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 28, 2023

கால்நடைகளை கொண்டு செல்லத் தடை

வடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ். பெரேரா தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை உத்தியோகத்தர் பிரிவுகளில் 34 கால்நடை உத்தியோகத்தர் பிரிவுகள் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் வடமத்திய மாகாணம் ஊடாக வடமேல் மாகாணத்திற்கும் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வைத்தியர் ஜே.ஏ.எஸ். பெரேரா, பசுக்களுக்கு இந்நோய் தாக்கியதன் பின்னர் பால் உற்பத்தி குறைவதோடு இது ஒரு மோசமான நிலைமையாக மாறக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது வடமேல் மாகாண பால் உற்பத்தியையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நோய் பரவி வருவதால் கால்நடைகள் இறப்பது மிக அதிகமாக இருப்பதாகவும், இந்நோய்க்கு உரிய சிகிச்சை அளித்து கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சை அளித்தால், கால்நடைகள் குறுகிய காலத்தில் குணமடையலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கவுள்ளதாக, வைத்தியர் ஜே.ஏ.எஸ். பெரேரா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment