அரச நிறுவனங்களை பயன்படுத்த இடமளிக்க முடியாது : மனசாட்சிக்கமைய எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 23, 2023

அரச நிறுவனங்களை பயன்படுத்த இடமளிக்க முடியாது : மனசாட்சிக்கமைய எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்புக்கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க முடியாது. எனவே மனசாட்சிக்கமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. அவர் நாட்டுக்கு இழைத்துள்ள பாதிப்புக்கள் தொடர்பில் தரவுகளுடன் பாராளுமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபரொருவர் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வெவ்வேறு நிபுணர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவாரானால் , அதற்கு எந்தவொரு அரசாங்கத்தினாலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானவர்கள் குறிப்பிடுவதைப் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தால் இன்றும் நாடு நெருக்கடியிலேயே காணப்பட்டிருக்கும்.

கடந்த காலத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடைந்த நஷ்டம் தொடர்பில் அறிந்தவர்கள் இவரைப் போன்று செயற்பட மாட்டார்கள்.

சுமார் 500 பில்லியன் ரூபாவை விட அதிகளவில் இவை நஷ்டமடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமையால் எம்மால் தன்னிச்சையாக விலைகளைத் தீர்மானிக்க முடியாது.

எனவே தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்புக்கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க முடியாது. எனவே மனசாட்சிக்கமையயே நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment