புதிதாக 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில் 1035 சாரதிகள் மற்றும் 450 நடத்துனர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
புதிய ஆட்சேர்ப்பு மூலம் வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment