பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 30, 2023

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய நால்வர் கைது

(எம்.வை.எம்.சியாம்)

சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியமை தொடர்பில் நால்வர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று புதிதாக பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த முயன்றபோது மாணவர்களை தாக்கி காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் நால்வர் பலங்கொடை பிரதேசத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுகளுடையவர்கள் எனவும் அவர்கள் தெஹிவளை, மொரட்டுவை, அம்பலாங்கொடை மற்றும் வெலிமட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பலங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment