(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தின் செலவு ஒழுங்கு வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டால் பொருளாதார முகாமைத்துவம் செய்வதில் சிக்கலுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தேர்தலுக்கு நிதி ஒதுக்காமல் வந்த நிதி அமைச்சின் தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டர்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பொருளாதார ரீதியில் சிக்கலான நிலைக்கு முகம்கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வருமானத்துக்கு அமைய செலவு ஒழுங்கு வரிசை ஒன்றை அமைத்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறான நிலையில் செலவு செய்யும் ஒழுங்கு வரிசையை மாற்ற வேண்டி ஏற்பட்டால் பொருளாதார முகாமைத்துவம் செய்வதில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகிறது.
நாட்டில் இந்த வருடத்துக்கு செலவிட வேண்டிய அனுமதிக்கப்பட்ட பல விடயங்கள் பாரியளவில் புத்தகத்தில் இருக்கின்றன. என்றாலும் எமது மறை பொருளாதாரத்தில், செலவிடுவதில் ஒழுங்கு வரிசை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு செலவழித்து வருவதாலே மக்கள் கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள இருந்து வந்த வரியையை இல்லாமலாக்கி இருக்கிறோம்.
ஆனால் தற்போது நாங்கள் பின்பற்றி வரும் செலவிடும் இந்த ஒழுங்கு வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடுவதில் சிக்கல் ஏற்படும்.
அத்துடன் இந்த மாதத்தில் சமுர்த்தி கொடுப்பனவு, பாடசாலை அச்சுப்புத்தகம் அச்சிடுதல், நெல் கொள்வனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துதல் போன்ற விடயங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டி இருக்கிறது. அதேபோல் உரம் கொள்வனவு செய்வதற்கு செலவிட வேண்டி இருக்கிறது.
50 மில்லியனுக்கு அதிகம் செலவிட வேண்டிய பொருட்களுக்கு திறைசேரி பிணைமுறி மூலம் வழங்கி வருகிறோம். இவ்வாறே எமது செலவு நடவடிக்கைகளை தற்போது முகாமைத்துவம் செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த செலவு ஒழுங்கு வரியில் மாற்றம் ஏற்பட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment