தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 7, 2023

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30, 31ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  தெரிவித்தார்.

இதேவேளை, நாளையதினம் (09) திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு உகந்த திகதியாக எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்திருந்தது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கமைய, ஏப்ரல் 25ஆம் திகதியை புதிய தேர்தல் திகதியாக ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அறிவிப்பார்கள் என,தேர்தல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment