திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் இணைந்து பண மோசடிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (08) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
No comments:
Post a Comment