பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் : 1,167 பதவிக்கு குவிந்த 32,000 இளைஞர், யுவதிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 2, 2023

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் : 1,167 பதவிக்கு குவிந்த 32,000 இளைஞர், யுவதிகள்

பாகிஸ்தான் இளைஞர்களில் சுமார் 32 சதவீதம் பேர் வேலை இல்லாமல் திண்டாடும் சூழலில், 1,167 பொலிஸ் பணிக்கு சுமார் 32,000 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பொலிஸ் துறையில் சுமார் 1,167 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு கல்வி கற்றிருந்தால் போதுமானது. ஆனால் இந்த கல்வி தகுதியை தாண்டி பட்டதாரிகள் பலர் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கான எழுத்துப் பரீட்சை இஸ்லாமாபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் என சுமார் 32,000 க்கும் மேற்பட்டோர் பரீட்சையை எழுதினர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிவேகமாக பரவி வருகிறது.

வெறும் 1,167 பொலிஸ் பணிக்கு 32,000 பேர் பரீட்சை எழுதியிருப்பது வேலையில்லா திண்டாட்ட அவலத்தை அம்பலமாக்கி இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment