கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கோணமுட்டாவ தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம் - முழு சம்பளம் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.
வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டது - 20 கிலோ வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கு ஏற்ற வகையிலே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை தொகை 16 கிலோவாக குறைக்கப்பட்டது.
ஒவ்வொரு நிலுவைக்கும் வலுக்கட்டாயமாக 3 கிலோ தேயிலை குறைப்பு - நாளை முதல் 1 கிலோவாக மாற்றி அமைக்கப்பட்டது.
ஞாயிறு மற்றும் பௌர்ணமி நாட்கள் 1 1/2 நாள் சம்பளம் வழங்கப்படவில்லை - தற்போது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது -இனிவரும் காலங்களில் முழு சம்பளமாக வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டது. உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தோட்ட நிர்வாகத்தால் வழங்கபட்ட ஒப்புதலை ஏற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தில் இருந்து தேயிலை தூளை ஏற்றுமதிக்கு வெளியேற்ற அனுமதி வழங்கியது.
No comments:
Post a Comment