யூடியூப் (youtube) காணொளிகளைப் பார்த்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்னைப்பர் துப்பாக்கியைப் போல் துப்பாக்கியொன்றை தயாரித்தவர் வாதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும், இத்துப்பாக்கி நான்கு அடி நீளம் கொண்டதெனவும் சந்தேகநபர் தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சந்தேக நபர் சில காலமாக போதைப் பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கழிவு பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளிப்பாகங்கள், ஸ்பிரின், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்களே இந்த துப்பாக்கி மற்றும் பைனாகுலர் ஆகியனவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனைகள், நாய்கள் மற்றும் பறவைகளை இந்த துப்பாக்கியினால் சுட்டதாகவும், சுடப்பட்ட பறவைகள், விலங்குகள் அதே இடங்களில் வீழ்ந்து இறந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment