குகுலே கங்கை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திடீரென தானாக திறக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த வான் கதவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திறக்கப்பட்டதாக நீர்த் தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வினாடிக்கு சுமார் 500 கனமீட்டர் அளவுக்கு பெரிய அளவிலான நீரோட்டம் பாய்ந்து வருவதாக நீர் வழித் துறையின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு இயக்குநர் பொறியாளர் எஸ்.பி.சி சுகீஸ்வர தெரிவித்தார்.
இதன் காரணமாக குடா கங்கையை அண்மித்துள்ள புளத்சிங்கல, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் உடனடி வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வான் கதவுகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் எனினும் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்த 6 மணித்தியாலங்களில் இந்த அபாயம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment