உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, விவசாயத் துறை அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய உணவு நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (03) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இலங்கைப் பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP உதவிப் பிரதிநிதி மாலின் ஹெர்விக் ஆகியோருடன் நாட்டின் தற்போதைய உணவு நிலைமை தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்த திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதோடு, இந்த முயற்சிக்கு ஆதரவை வழங்க UNDP இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறை தற்போது எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை, உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, தன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர்ப்புற விவசாய உற்பத்தி முயற்சியையும் பிரதமர் விரிவாக தெளிவுபடுத்தினார்.
உரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க விவசாய சமூகத்திற்கு உதவும் புத்தாக்கமான விவசாய உதவித் திட்டத்தைத் தொகுத்து வருவதாக UNDP இதன்போது விளக்கமளித்தது.
நன்கொடையாளர்கள் நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதையும் நகர்ப்புற விவசாயத் திட்டம், மேலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அதிக நிதியுதவி வழங்கப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் அமுல்படுத்தப்படக்கூடிய உணவு நெருக்கடிக்கான பதில் திட்டத்தை தாங்கள் உருவாக்கி வருவதாகவும் FAO தெரிவித்துள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் உரம், எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், தற்போது நிலவும் உணவுப் பற்றாக்குறையைப் 5-6 மாதங்களுக்குள் போக்க முடியுமென பிரதமர் இதன்போது விளக்கினார்.
No comments:
Post a Comment