சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் : மகஜரும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் : மகஜரும் கையளிப்பு

பண்டாரகம - அட்டலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று கண்டன போராட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்பக்க ஏ 9 வீதியில் வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சி பழைய கச்சேரியிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

No comments:

Post a Comment