இலங்கையில் மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.
60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, பரசிட்டமோல் மாத்திரை (500 mg மாத்திரை) ஒன்று ரூ. 4.16 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் பரசிட்டமோல் மாத்திரையொன்றின் உச்சபட்ச சில்லறை விலை ரூபா 2.30 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாத்திரைகள் தொடர்பில் அறிந்துகொள்ள https://cdn.virakesari.lk/uploads/medium/file/176863/2277-55_T.pdf
No comments:
Post a Comment