(எம்.எம்.சில்வெஸ்டர்)
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கான தேசிய விளையாட்டு சபை நியமனம் அடுத்த வாரமளவில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தேனுக விதானகமகே தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டுப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மீளவும் இணைந்து கொள்ள விரும்பினால் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் (29) முடிவடைந்து உள்ளதாகவும், முன்னாள் உறுப்பினர்களில் சிலர் புதிய தேசிய விளையாட்டு சபையில் இணைவதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வந்த நாமல் ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து மஹேல ஜயவர்ன தலைமையிலான தேசிய விளையாட்டு சபையும் தத்தம் உறுப்பினர் பதவிகளிலிருந்து பதவி விலகிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தேசிய விளையாட்டு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னர், தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சில் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், ஆறு முன்னாள் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment