இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50kg சீமெந்துப் பொதியின் விலை ரூ. 2,350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, துறைமுகக் கட்டணம், கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்கள், உற்பத்திச் செலவு ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக 50kg சீமெந்து பொதியின் விலையை அண்மையில் ரூ. 350 இனால் அதிகரிக்க சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதற்கமைய ரூ. 1,850 ஆக அதிகரிக்கப்பட்டிருந்த சீமெந்து பொதிகளின் விலை ரூ. 2350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment