ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,ய் எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, வீடு செல் கோட்டா (Go Home Gota) எனும் வாசகங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மிரிஹான - பெங்கிரிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இன்று (31) இரவு 7.30 மணியளவில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment