உயிரிழந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து இலட்சக்கணக்கான பணம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

உயிரிழந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து இலட்சக்கணக்கான பணம் மீட்பு

மாத்தறை ஹக்மன நகரில் பொலிஸார் நடத்திய சோதனையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்த பிச்சைக்காரின் ஆடைகளில் இருந்தும், அவரிடமிருந்த பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், நேற்று (10) வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் இல்லை என்றும், அதனால் அவரது சடலம் உரிமை கோரப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார், அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பைகளில் இருந்து குறித்த பணத் தொகையை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment