அம்பாறையில் வாகன விபத்து : மூவர் பலி, ஐவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 17, 2022

அம்பாறையில் வாகன விபத்து : மூவர் பலி, ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை - தமன பிரதேசத்தில் கார் மற்றும் லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடியைச் சேர்ந்த 8 பேர் வெள்ளிக்கிழமை கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டு சம்பவதினமான நேற்று (ஞாயற்றுக்கிழமை) ஊர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சுமார் மாலை 6.00 மணியளவில் அம்பாறை - தமன பிரதேசத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொழும்பு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இப்றா லெப்பை முகம்மது ஜெசீல் (வயது-45), சம்மாந்துறை, நெய்னாகாடு அல் அக்சா வித்தியாலய ஆசிரியர் சுலைமா லெப்பை பிரோஸா (வயது 42), 4 வயதுடைய பிள்ளை என மூவர் மரணித்துள்ளதாக அறிய முடிகிறது.

அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் கல்முனைக்குடியைச் சேரந்த மூவரும் மொத்தமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இச்சம்பத்தில் சம்மாந்துறை, கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் துக்க நிலை உருவாகியுள்ளதைக் காண முடிகிறது.

ஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர்

No comments:

Post a Comment