இலங்கையில் வீதி விபத்துகளால் இவ்வருடம் 2,419 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

இலங்கையில் வீதி விபத்துகளால் இவ்வருடம் 2,419 பேர் பலி

இந்த வருடம் நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 2,419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே விபத்துக்களில் மேற்படி 2,419 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் வீதியில் நடத்து சென்ற 697 பேர், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 901 பேர், மோட்டர் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த 152 பேர், வாகன சாரதிகள் 243 பேர், துவிச்சக்கர வண்டிகளில் பயணம் செய்த 184 பேர் உள்ளிட்டோர் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடம் முழுவதும் இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 13,469 பேர் காயமடைந்துள்ளதாகவும், 5,263 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், 8,216 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

(கற்பிட்டி விஷேட நிருபர்)

No comments:

Post a Comment