குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு : சந்திம வீரக்கொடி MP யின் உரைக்கு ஜனாதிபதி செயலகம் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 21, 2021

குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு : சந்திம வீரக்கொடி MP யின் உரைக்கு ஜனாதிபதி செயலகம் விளக்கம்

கடந்த இரண்டு வருட கால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார். 

நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தும் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள முழுமையான ஊழியர்கள் மற்றும் வாகன எண்ணிக்கை என்பன, நல்லாட்சிக் காலத்திலிருந்த ஊழியர் மற்றும் வாகன எண்ணிக்கையில் மூன்றில் ஒரு (1/3) பகுதியாகும்.

விடயம் இவ்வாறு இருக்கும்போது, சரியான தகவல்கள் அல்லது தரவுகளை ஆய்வு செய்யாமல், ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனப் பயன்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதும் சரிவர ஆய்வு செய்யாமலும் முன்வைக்கப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 

ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும்.

அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக்கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களையே குறித்த கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

அதனால், சந்திம வீரக்கொடி உண்மையான விடயத்தை அறியாது, இவ்வாறு தவறான தகவல்களை முன்வைப்பது வருந்தத்தக்க விடயமாகுமென ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டுகின்றது.

No comments:

Post a Comment