புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஓமிக்ரான் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.
ஓமிக்ரான் தெடர்பாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு அமைவாக இவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, ஓமிக்ரான் வைரஸ் திரிபின் ஏழு முக்கிய கூறுகள் பின்வருமாறு
1. பரவும் முறை
ஓமிக்ரான் திரிபின் பரவும் திறன் டெல்டா உட்பட மற்ற வகைகளை விட வேகமாக பரவும் (உதாரணம் - ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும்).
2. நோயின் தீவிரம்
டெல்டா உள்ளிட்ட பிற பிறழ்வுகளுடனான நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
3. முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் பிறழ்வுகளின்படி நோய்த்தொற்றின் விளைவு
ஏனைய கொவிட் வகைகளுடன் ஒப்பிடும்போது, இதற்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் என்பதாக ஆரம்ப பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. தடுப்பூசிகளின் செயல்திறன்
டெல்டா உட்பட கடுமையான நோய் மற்றும் இறப்புக்களைக் குறைப்பதில் தடுப்பூசி முக்கியமானது. தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயற்படும். (மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன)
5. தற்போதைய பரிசோதனைகளின் அமைவாக நோய்பாதிப்பு
பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகள் ஊடாக, ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் உட்பட, தொற்றுநோய்களைக் கண்டறிவது தொடருவோம்.
6. தற்போதைய சிகிச்சையின் செயல்திறன்
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகளை நிர்வகிப்பதில் Corticosteroids மற்றும் IL6 Receptor Blockers இன்னும் பயனுள்ளதாக இருக்கும். ஓமிக்ரான் திரிபில் உள்ள வைரஸின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, அவை இன்னும் பயன் உள்ளதா என்பதை பார்க்க ஏனைய சிகிச்சைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
7. ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
புதிய கொவிட் பிறழ்வுகளை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு ஆராய்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஏழு விடயங்களுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேராசிரியர் சந்திம ஜிவந்தர கவனம் செலுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment