இன்று முதல் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

இன்று முதல் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

இன்று (01) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,

சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளரினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர் வரையில் கலந்துகொள்வதற்கு அனுமதி

திருமண நிகழ்வுகளில் மதுபானத்துடனான விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை

திரையரங்குகளில் ஒரு தடவையில் 75 வீதமானோருக்கு அனுமதி

மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி

வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்

வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் மூன்றில் ஒருவீதமானோருக்கே அனுமதி. அத்துடன், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல் உள்ளிட்ட புதிய வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment