சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு, சில மணி நேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்த மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற மற்றொறு வாக்கெடுப்பு அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியே பெற்றுத் தந்தது.
சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அண்டர்சன் மிகக் குறைந்த வாக்குகளினால் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
173 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர், மேலும் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்திருந்திருந்தால் அவர் இந்த உயர் பதவியை இழந்திருப்பார்.
எவ்வாறெனினும் ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக மக்டலினா ஆண்டர்சன் சுவீடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செவ்வாயன்று அந்நாட்டு மன்னருடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமர் பணிகளை ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24ம் திகதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பதவி விலகும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
கூட்டணி ஆட்சியை அமைக்க அவரது கட்சிக்கு வழங்கிய ஆதரவை கிரீன்ஸ் கட்சி திடீரென திரும்பப் பெற்றது. அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுறைப்படி கூட்டணிக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். எனவேதான் பிரதமர் மெக்தலினா பதவி விலகினார் என்பது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment