நபர் ஒருவரின் வரவு அட்டையை (Debit Card) கொண்டு சுமார் ரூபா 6 இலட்சம் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர்கள் இருவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உரும்பிராயைச் சேர்ந்த நபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை தொடர்பில் அவர் அறிந்திருந்த நிலையில் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூபா 6 இலட்சம் பணம் அவரது கணக்கிலிருந்து பெறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து வங்கியை நாடிய அவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவியுடன் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மீளப் பெற்ற இருவர் தொடர்பான புகைப்படங்களைப் பொலிஸார் வங்கிலியிருந்து பெற்றுக் கொண்டனர்.
சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பளிகக்கார கேட்டுள்ளார்.
குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment