16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற ஜீப் விபத்து உணர்த்துவது என்ன? - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற ஜீப் விபத்து உணர்த்துவது என்ன?

எம்.எப்.எம்.பஸீர்

மஹ­பாகே பொலிஸ் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 16 வயது சிறு­வ­னையும் அவ­னது தந்­தை­யையும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. வத்­தளை நீதிவான் ஹேஷான் டி மெல் இதற்­கான உத்­த­ரவை கடந்த 5 ஆம் திகதி பிறப்­பித்தார்.

புனித மரியாள் வீதி, வெலி­சறை - மஹ­பாகே முக­வ­ரியைச் சேர்ந்த 16 வய­தான மொஹம்மட் ரக்ஷான் அப்­துல்லாஹ் எனும் மாண­வனும் 47 வய­தான அவ­ரது தந்தை பெஸ்­டியன் நெஸ்­பி­ரகே சுரஞ்சித் சந்­ரலால் எனும் அப்­துல்லாஹ் என்­ப­வ­ருமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாவர்.

விபத்தை ஏற்­ப­டுத்­திய 16 வயது மக­னுக்கு எதி­ராக மஹ­பாகே பொலிஸார், சாரதி அனு­மதிப் பத்­திரம் இன்றி வாகனம் செலுத்­தி­யமை, அபா­ய­க­ர­மாக வாகனம் செலுத்­தி­யமை, விபத்தை ஏற்­ப­டுத்தி ஒரு­வ­ருக்கு மர­ணத்தை ஏற்­ப­டுத்தி நால்­வ­ருக்கு காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, விபத்­தொன்­றினை தடுக்­காமை போன்ற குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் தண்­டனை சட்டக் கோவையின் 298,329,328 மற்றும் மோட்டார் வாகன சட்­டத்தின் 151(3), 149(1), 123(1) அ பிரி­வு­களின் கீழ் வழக்குப் பதிவு செய்­துள்­ளனர்.

அச்சிறு­வனின் தந்­தைக்கு எதி­ராக, தண்­டனைச் சட்டக் கோவையின் 298, 329, 328 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும், மோட்டார் வாகன சட்­டத்தின் 298, 123 (1) அ பிரிவின் கீழும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்­துள்­ளனர். குறிப்­பாக சாரதி அனு­மதிப் பத்­திரம் இல்­லாத ஒரு­வ­ருக்கு வாகனம் செலுத்த சந்­தர்ப்பம் அளித்­தமை தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் 
பொலி­ஸாரின் தகவல் பிர­காரம், இந்த விபத்துச் சம்­பவம் வரு­மாறு, கடந்த 4 ஆம் திகதி காலை வேளையில், கொழும்­பி­லி­ருந்து நீர் கொழும்பு நோக்கி கறுப்பு நிற சொகுசு ஜீப் வண்­டி­யொன்று பய­ணித்­துள்­ளது. இந்த ஜீப் வண்­டி­யா­னது மஹ­பாகே பொலிஸ் பிரிவில் வைத்து, நீர் கொழும்­பி­லி­ருந்து கொழும்பு நோக்கி வந்­து­கொண்­டி­ருந்த ஒரு கார், ஒரு முச்­சக்­கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்­கிள்­களை மோதி­யுள்­ளது. சார­தியால் ஜீப் வண்­டியை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல், அது பாதையை விட்டு விலகி எதிர்த்­தி­சையில் வந்த வாக­னங்­களை இவ்­வாறு மோதி­யுள்­ளது.

இந்த விபத்தில் 5 பேர் படு­கா­ய­ம­டைந்து, உட­ன­டி­யாக கொழும்பு வடக்கு போதனா வைத்­தி­ய­சாலை என அறி­யப்­படும் ராகம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த 51 வய­தான மஹ­பாகே பகு­தியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், அவ­ரது மக­னான 16 வய­தான சிறுவன் ஒருவன் மிக கவ­லைக்­கி­ட­மான நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இலங்­கையில் விபத்து 
இலங்­கையில் நாளாந்தம் ஏற்­படும் விபத்­துக்­களால் நாளொன்­றுக்கு 10 முதல் 11 பேர் வரை உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. வரு­டாந்தம் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் விபத்­துக்கள் பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரி­வுக்கு பதி­வா­கின்­றன. எனினும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை­யி­லான விபத்­துக்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் பல விபத்­துக்கள் பொலிஸ் நிலையம் வரை செல்­லாது சம­ர­ச­மாக முடித்­துக்­ கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸ் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

விபத்­துக்­க­ளுக்­கான முக்­கிய காரணம் 
நாளாந்தம் பதி­வாகும் விபத்­துக்­களில் பல, சார­தி­களின் கவ­ன­யீனம், வேகக்­கட்­டுப்­பாட்டை இழத்தல், அனு­மதிப் பத்­திரம் அற்ற சார­தி­களின் நட­வ­டிக்­கைகள், குடி போதையில் வாகனம் செலுத்தல், நிதா­ன­மின்மை, அவ­சரம், தூக்கம் போன்­ற­வற்றால் ஏற்­ப­டு­கின்­றமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வாக­னத்தைச் செலுத்தும் போது அதில் சார­திகள் மட்­டு­மல்ல அவர்­களை நம்பி ஒரு குழு­வி­னரும் பய­ணிக்­கின்­றனர் என்­ப­தையும் வீதி­களில் அதி­க­மான மக்கள் நட­மா­டு­வ­தையும் சார­திகள் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த வரு­டங்­களில் வீதி விபத்­துக்­க­ளினால் மர­ணித்­த­வர்­களின் எண்­ணிக்­கையும், படு­கா­ய­முற்­ற­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வீதி விபத்­துக்­க­ளினால் ஒருவர் மர­ண­ம­டை­யும்­போது அந்த குடும்­பத்தின் நிலை, படு­கா­ய­ம­டையும் நபரின் குடும்­பத்தின் நிலை, அக்­கு­டும்­பங்­களின் பொரு­ளா­தார பிரச்­சினை என்­பன மிகப் பெரும் பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுப்­ப­துடன், சார­திக்கு தண்­டனை வழங்கும் பட்­சத்தில் அக்­கு­டும்­பத்தின் நிலை தொடர்­பிலும் சிந்­திக்க வேண்டும்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் வீதியில் வாக­னத்தைச் செலுத்தும் ஒவ்­வொரு சார­தியும் நிதா­னத்­து­டனும், வீதி ஒழுங்கை சரி­வர கடைப்­பி­டிக்கும் போதுமே இந்த பிரச்­சி­னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

விபத்­துக்கள் தொடர்­பி­லான புள்ளி விப­ரங்கள் 
கடந்த 2014 ஆம் ஆண்டு 2404 பேர் விபத்­துக்­களால் மர­ணித்­துள்­ளனர், 2015 ஆண்டு 2722 பேர் மர­ணித்­துள்­ளனர். 2016 ஆம் ஆண்டு 3003 பேர் மர­ணித்­துள்­ளனர். 2017 ஆம் ஆண்டு 3101 பேர் மர­ணித்­துள்­ளனர். 2018 ஆம் ஆண்டு 3097 பேரும், 2019 ஆம் ஆண்டு 2851 பேரும் மர­ணித்­துள்­ளனர்.

மஹ­பாகே விபத்தும் பாடங்­களும் 
இவ்­வா­றான பின்­ன­ணியில் மஹ­பா­கேயில் இடம்­பெற்ற விபத்தின் பின்னர் அந்த விபத்தை மையப்­ப­டுத்­திய பல தக­வல்கள் ஊட­கங்கள், சமூக ஊட­கங்கள் ஊடாக பர­வின.

அவை அனைத்­தையும் வைத்து ஆராயும் போது, விபத்­துக்­கான முக்­கிய கார­ணி­யாக, சாரதி அனு­மதிப் பத்­திரம் இல்­லாத ஒரு சிறு­வ­னுக்கு வாகனம் செலுத்த அனு­ம­தித்­தமை, அம்­மா­ண­வனால் வாக­னத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனமை ஆகி­யன அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளன.

வீட்­டி­லி­ருந்து தனது சகோ­த­ரி­யுடன் குறித்த மாணவன் வாக­னத்தில் செல்­கிறார் என்றால், அது முதற் தட­வை­யாக இருக்க முடி­யாது. ஏற்­க­னவே அச்சிறு­வ­னுக்கு அந்த வாக­னத்தைச் செலுத்த சந்­தர்ப்பம் அளிக்­கப்­பட்­டி­ருப்­பதால் மட்­டுமே, எந்த தயக்­கமும் இன்றி அவன் வாக­னத்தை எடுத்துச் சென்­றி­ருக்க முடியும்.

இன்று, இலங்­கையில் பல பகு­தி­க­ளிலும் பெற்றோர், சாரதி அனு­மதிப் பத்­திரம் பெறும் வயதைக் கூட எட்­டாத தமது பிள்­ளை­க­ளுக்கு வாக­னங்­களைச் செலுத்த அனு­ம­திப்­பதை நாம் காண்­கிறோம். அது மோட்டார் சைக்கிள் முதல், கார் ஜீப் எது­வா­கவும் இருக்­கலாம். இந்நட­வ­டிக்கை சட்­டத்தை மீறும் செயல் மட்­டு­மன்றி, தமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­தையும், மூன்றாம் நபர் ஒரு­வரின் எதிர்­கா­லத்­தையும் கேள்­விக்கு உட்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யாகும்.

எனவே இது தொடர்பில் ஒவ்­வொரு பெற்­றோரும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

சாரதி அனு­மதிப் பத்­திரம் இல்­லாத ஒரு­வ­ருக்கு வாக­னத்தைச் செலுத்த அனு­ம­திப்­பது சட்­டப்­படி தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். எனவே அது தொடர்பில் அவ­தானம் செலுத்தி நடந்து கொள்ள வேண்டும்.

மஹ­பாகே விபத்து தொடர்பில் நீதிவான் தெரி­வித்­தமை 
மஹ­பாகே விபத்து தொடர்­பி­லான வழக்கு தொடர்பில் வத்­தளை நீதி மன்றில் விட­யங்­களை முன் வைத்த பொலிஸார், கைது செய்­யப்­பட்ட சிறுவன் கே.எஸ். 4893 எனும் இலக்­கத்தை உடைய மென்­டரோ ஸ்போர்ட்ஸ் - மிட்­சு­பிசி ரக சொகுசு ஜீப்­பினை செலுத்திச் சென்ற நிலையில் அது கட்­டுப்­பாட்டை இழந்து விபத்து சம்­ப­வித்­துள்­ள­தாக சுட்டிக்காட்டினர். இதனால் மரணமடைந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது 16 வயது மகனும் படுகாயமடைந்து தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.

இதன்­போது மன்றில் இந்த விபத்து தொடர்பில் தீவிர அவ­தானம் செலுத்­திய நீதிவான், இந்த விபத்­தா­னது பொல்­க­ஹ­வ­லையில் பல ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற ரயில் - பஸ் விபத்­தினை ஒத்த விபத்­தாக இதனை நினைவு கூர்ந்தார். அந்த அள­வுக்கு பார­தூ­ர­ம­ன­தாக அவர் இந்த விபத்தை ஒப்­பீடு செய்தார்.

இந்நிலை­யி­லேயே தந்தை, மகன் இரு­வ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment