புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சுகாதார வழிகாட்டி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டியின் படி, நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு பங்குப்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்டபங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் 150 பேர் வரை கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment