சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஆசிரிய, அதிபர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் மற்றும் நுவரெலியா, இரத்தினபுரி உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஆசிரிய அதிபர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி எஸ்.ஆனந்தகுமார், அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாதுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இவர்களது பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், சேர்க்கப்பட்டது என்றாலும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்காமையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், ஆசியரியர்களின் சம்பள முரண்பாடும் தீர்க்கப்பாடது போனது.
நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசியர்களுக்கு உரிய அரச அங்கீகாரத்தை வழங்க அவர்களது சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும். எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜட்டில் இதற்கு உரிய தீர்வை அரசாங்கம் முன்மொழிய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment